60 வயது மூதாட்டியை அடித்து தும்புறுத்தி உயிரோடு கொளுத்திய நபர்!

ஜார்க்கண்டின் சிம்டெகா நகரின் தீத்தைடேஞ்சர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜாரியோ தேவி (வயது 60). கடந்த புதன்கிழமை இவர், புளோரன்ஸ் டங்டங் என்பவரின் மனைவியின் இறுதி சடங்கு விருந்தில் கலந்து கொண்டார்.
    
இந்த விருந்து முடிந்தவுடன், ஜாரியோவை சூனியக்காரி என கூறியதுடன், அவரது மனைவி மரணத்திற்கு ஜாரியோவே காரணம் என புளோரன்ஸ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து மூதாட்டியை அடித்து, துன்புறுத்தியுள்ளனர்.

இதன்பின்பு, ஒரு கட்டத்தில் ஜாரியோ மீது தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சூழ்ந்திருந்த கிராமவாசிகள் அவரை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த போலீசார் புளோரன்ஸ் மற்றும் 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!