பின்வரிசைக்கு மாற்றப்பட்டார் சுசில்!

இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் பாராளுமன்ற ஆசனமும் மாற்றப்பட்டுள்ளது. கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, அவர் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் 31ஆவது ஆசனத்தைப் பெற்றிருந்தார்.
    
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருப்பதால் அவருக்கு ஆளும் கட்சியின் 71ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதனால் அவர் 40 இடங்கள் பின்தங்கி ஆளும் கட்சியின் 71ஆவது ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்ததாகக் கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அண்மையில் சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!