கருப்பு பணத்தில் ஆயுதங்களை வாங்கவில்லை! – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு February 2, 2022 7:44 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கருப்பு சந்தைப் டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் ஆயுதங்களை கொள்வனவு செய்யவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.இறுதிக் கட்ட போரின் போது கருப்பு சந்தை அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் ஆயுதங்கள் கொள்வனவு செய்தோம் என நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.வார இறுதி பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்த செய்திகளில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிதி அமைச்சர் பசிலை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறான கருத்தை தாம் வெளியிடவில்லை என பசில் ராஜபக்ச கூறியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…