‘ஏர் இந்தியா’ என பெயர் வைக்க என்ன காரணம்? – டாடா நிறுவனம் விளக்கம்!

பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா எப்படி இந்த பெயர் வந்தது என டாடா நிறுவனம் தனது டுவிட்டர் தளத்தில் தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது. டாடா நிறுவனத்திடம் கடந்த 27-ம் தேதி அன்று ஏர் இந்திய நிறுவனத்தை முறைப்படி ஒப்படைத்தது. ஏற்கனவே இந்த நிறுவனத்தை டாடா நிறுவனத்திடம் இருந்துதான் மத்திய அரசும் வாங்கியிருந்தது.
    
அதன்படி 1946-ம் ஆண்டு டாடா நிறுவன ஊழியர்களிடமே இதற்கான கருத்துக்கணிப்பு நடத்துக்கையில், இந்தியன் ஏர்லைன்ஸ், பான்-இந்தியன் ஏர்லைன்ஸ், டிரான்ஸ்-இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகிய 4 பெயர்களில் ஒன்றை தேர்வு செய்யுமாறு அவர்கள் பணிக்கப்பட்டு இருந்தனர்.

இதில் அதிகபட்சமாக 72 வாக்குகள் ஏர் இந்தியாவுக்கும், 58 வாக்குகள் இந்தியன் ஏர்லைன்ஸ் என்ற பெயருக்கும் கிடைத்தன. இதைத்தொடர்ந்து நாட்டின் முதல் விமான நிறுவனத்துக்கு ‘ஏர் இந்தியா’ என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த தகவலை தான் இந்த தகவலை டாடா நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!