43 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மலை இடுக்கில் சிக்கிய இளைஞர் மீட்பு! February 10, 2022 8:15 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கேரளாவில் மலை இடுக்குகளில் இருந்து தன்னை மீட்ட ராணுவ வீரர்களுக்கு பாபு அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கேரளாவின் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு. அங்குள்ள குறம்பாச்சி மலைப்பகுதியில் நண்பர்களுடன் டிரெக்கிங் சென்ற போது பாபு தவறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் இடுக்கில் மாட்டிக்கொண்டார், உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 43 மணிநேரமாக போராடிய பாவுவை மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.மலையில் ஏறும் வீரர்கள் கயிறு வைத்து ஏறி பாபுவிற்கு அருகே சென்று அவரை மீட்டு அழைத்து வந்துள்ளனர்.பாபு ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவருக்கு காலில் மட்டும் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…