கனடாவில் வெளிச்சத்துக்கு வந்த மருத்துவரின் கோர முகம்: பெண்களே உஷார்! February 10, 2022 8:17 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கனடாவின் கல்கரியில் மருத்துவர் ஒருவர் மீதான துஷ்பிரயோக புகாரின் மீது பொலிசார் முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் வழக்கு பதிந்துள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் கட்டாயம் உரிய அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் அளித்த துஸ்பிரயோக புகாரின் அடிப்படையில் உள்ளூர் மருத்துவர் ஒருவர் மீது கல்கரி பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கடந்த 2012 டிசம்பர் மாதம் இருதய நோய் தொடர்பான சிகிச்சையின் ஒருபகுதியாக குறிப்பிட்ட மருத்துவரை நாடியதாகவும், ஆனால் மருத்துவ சோதனை என்ற போர்வையில் குறித்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் புகாரில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் தொடர்புடைய 65 வயதான மருத்துவர் Michael Stephen Connelly மீது ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.மேலும், குறித்த மருத்துவரால் பாதிக்கப்பட்டிருந்தால் விசாரணை அதிகாரிகளை நாட வேண்டும் எனவும், அவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனவும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…