பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்!

2022 ஆம் ஆண்டுக்கான தமது வழிவரைபடத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
    
பயங்கரவாதத்துக்கான புதிய வரைவிலக்கணத்துடன் பயங்கரவாதக் குற்றமும், தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தாம் நம்புவதாக, இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் பயங்கரவாதத்தை விசாரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றத்துக்காக சான்றுகள் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை விலக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஆதரிப்பதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!