உழைக்கும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது February 16, 2022 7:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்க மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.ஜா – எல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், குறித்த காரணத்தினாலேயே மேலதிக விசேட வரியிலிருந்து ஊழியர் சேமலாப நிதிக்கு விலக்களிக்க முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், நிதியமைச்சருடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர் மேலதிக விசேட வரியிலிருந்து ஊழியர் சேமலாப நிதி உள்ளிட்ட அரச நிதியங்களுக்கு விலக்களிக்க நிதியமைச்சர் இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், தொழில் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு பாரிய அளவிலான சேவைகள் வழங்கப்படுகின்ற போதிலும், அவர்கள் அது குறித்து அறிந்திருக்கவில்லை எனவும், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…