12 ஆண்டுகளுக்குப் பின்னர் அரசியல் கைதி விடுதலை! February 16, 2022 7:21 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கைதான அரசியல் கைதியொருவர் 12 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். விக்னேஸ்வரா கல்லூரி வீதி கரவெட்டி மேற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தப்பு ராஜசேகரே கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதி சந்திமல் லியனகேயினால் நேற்றைய தினம் நிரபராதி என தெரிவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கின் எதிரியான கந்தப்பு ராஜசேகர் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜாவின் ஆலோசணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் ஆலோசனையின் படி இறுதி யுத்தகால பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2010.10.19ஆம் திகதி கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…