அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் மஹிந்த:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் சிங்களத் தொலைக்காட்சி ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில்,

குடும்பத்துக்கு முக்கியத்துவம் வழங்காமல் மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவும் 25 ஆண்டுகள் தலைவர் பதவியை வகித்துவிட்டார்.
அவரும் விடைபெற வேண்டும். இவ்விருவரும் நாட்டுக்குச் சேவையாற்றியுள்ளனர்.

அதேபோல் குறைபாடுகளும் உள்ளன. அதேபோல் இருவருக்கும் இடையில் மாறுபட்ட திறமைகள் உள்ளன என தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!