இலங்கையிலுள்ள யுக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின் வீசா நீடிப்பு

இலங்கையில் தங்கியுள்ள யுக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின் வீசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பிரஜைகளின் வீசா செல்லுபடியாகும் காலம் 2 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு மேலதிக கட்டணமும் இன்றி  இந்தச் சலுகை  வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள யுக்ரேன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின்  வீசா செல்லுபடியாகும் காலத்தினை 30 அல்லது 60 நாட்களாக நீடிப்பதற்கு அமைச்சரவையில் முன்னதாக யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!