ஜயந்த சமரவீரவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவின் பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது அமைச்சுப் பதவியை  ராஜினாமா செய்வதாக   கடந்த  8 ஆம் திகதி அறிவித்திருந்தார்

அத்துடன்  தனது ராஜினாமா கடிதத்தை   ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவின்  பதவி விலகல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!