கோத்தபாயவைத் தோற்கடிக்க வியூகம் வகுக்கும் ‘றோ’!

கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக, கூட்டு எதிரணியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ‘றோ’ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை தொடர வைக்கு நோக்கிலும் அவர்கள் செயற்படுகின்றனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!