அரசில் இருந்து வெளியேறுகிறதா இதொகா? March 26, 2022 7:39 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் 23 ஆம் திகதியன்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டை காங்கிரஸ் புறக்கணித்திருந்தது. தாங்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து, நடைமுறைப்படுத்தாமையை கண்டித்தே, புறக்கணிக்க முடிவுச் செய்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.அத்துடன், தன்னுடைய கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியொன்றை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அரசாங்கத்தின் பிரதானிகளிடம் கோரியிருந்துள்ளார்.தான், பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டத்தில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் வழக்கப்பட்டுள்ளன நிலையில், அரசாங்கத்தின் வெற்றிக்காக பெரும் பங்காற்றிய தங்களுடைய கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கவில்லையென ஜீவன் தொண்டமான், அந்த பிரதானிகளின் காதுகளுக்குப் போட்டுள்ளார்.இவ்வாறான நிலையில், அரசாங்கத்துடன் தொடர்ந்து இருப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்வதற்கே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவசரமாகக் கூடவுள்ளதாக அறியமுடிகின்றது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…