நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்கு அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்   அஜித் நிவாட் கப்ரால் அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரை  எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி  அரச கணக்குகள் தொடர்பான  குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!