தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை! April 20, 2022 8:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கையின் நிலைமை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில்,நாளை என்ன நடக்குமோ என்று யாருக்கும் தெரியாது. எனவே தமிழ் மக்கள் போராட்டங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்பதுடன்,ஆனால் சிங்கள மக்களுடன் சேர்ந்து பயணிக்க கூடிய சூழல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,அதாவது தமிழ் மக்களின் போராட்டமாக இருப்பின் இராணுவம்,பொலிஸாரின் நடவடிக்கை இன்னும் தீவிரமாக காணப்பட்டிருக்கும்,அவர்கள் மீதான தாக்குதல் அதிகமாக இருக்கும். தமிழ் மக்களின் பிரச்சினை எனில் துப்பாக்கி பிரயோகம் மேலும் அதிகரித்திருக்கும்,பயம் காணப்பட்டிருக்காது.சிங்கள மக்களின் போராட்டம் என்பதனால் கொஞ்சம் பக்குவம் காணப்பட்டிருக்கும்.எனவே தமிழ் மக்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.போராட்டங்களை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டும் என்பதுடன் சிங்கள மக்களுடன் சேர்ந்து பயணிக்க கூடிய சூழல் இல்லை,காரணம் சிங்கள மக்கள் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…