தாமதித்து தவறு செய்து விட்டோம் – 50 மில்லியன் டொலர் மட்டும் கையிருப்பில்!

இலங்கையின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார்.
    
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வரிகளை அதிகரித்து சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னதாகவே இலங்கை சென்றிருக்க வேண்டும் .அத்துடன் ரூபாயை முன்னரே மிதக்கச் செய்திருக்க வேண்டும். இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!