மாடியிலிருந்து பயிற்சியாளர் தள்ளி விட்டதில் துடி துடித்து இறந்த மாணவி!

கோயம்புத்தூர் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2வது மாடியிலிருந்து பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் லோகேஸ்வரி தலையில் அடிபட்டு இறந்து போனார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கும் தங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் பயிற்சி அளித்தவர் தங்களது வாரியத்தை சேர்ந்தவரில்லை என்றும், மாணவியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை இன்று காலை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.