அரிசி விற்பனை குறித்து நுகர்வோர் விவகார சபை விடுத்த கருத்து…

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என   என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக  ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில்  5 லட்சம் ரூபாவரை அபராதம் விதிக்கப்படும்  எனவும்  குறிப்பிட்டுள்ளது.

 இதேவேளை தனியார் நிறுவனம் ஊடாக  அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக  5 லட்சம்  ரூபா  முதல்அதிகபட்சமாக 5 மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!