மே9 காலிமுகத்திடல் வன்முறை சம்பவம் – சனத் நிஷாந்தவிற்கு பிணை..!

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவ மேயர் உள்ளிட்ட மூன்று பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மே 9 காலிமுகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த மூவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தடுத்துவைக்ப்பட்டுள்ள டேன் பிரசாத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!