3 கிலோ மீற்றர் நீளத்துக்கு எரிபொருள் வரிசை – குழப்ப நிலையால் பதற்றம்!

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
    
இதன்போது இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளதுடன், இதனை தொடர்ந்து நள்ளிரவை அண்மித்தும் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று எரிபொருள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதனை அடுத்து அதிகாலை முதல் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெற்று சென்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்திற்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பலர் காத்திருக்கின்றனர்.
      

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!