உள்ளூராட்சித் தேர்தல் ஒருவாறு நடந்து முடிந்து ஆட்சியை அமைக்கின்ற வேலைகளும் பூர்த்தி யடைந்து விட்டன. தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநேகமான உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வா கத்தைப் பொறுப்பேற்றுள்ளது.
வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் செப்ரம்பர் மாதத்துடன் நிறைவுபெற விருப்பதால் அதற்கான தேர்தலும் இடம்பெறவேண்டும். பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இடம்பெறுமென ஊகம் வௌி யிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த கசப்பான அனுபவங்கள் இந்த முடிவுக்குக் காரணமாக ஆகியிருக்கக்கூடும்.
எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு இலகுவான தொன்றாக அமையப்போவதில்லை
வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரின் தெரிவு, கடந்தமுறை போன்று இம்முறை இலகுவானதாக இருக்கப்போவதில்லையென்பது இப்போதே தெரிய ஆரம்பித்து விட்டது. தற்போது முதலமைச்சர் பதவியை வகித்துவரும். சி.வி. விக்னேஸ்வரன் அடுத்த தடவையும் பதவி வகிப்பதில் உள்ள தமது விருப்பத்தை சூசகமாக வெளிப்படுத்தி யுள்ளார்.
ஆனால், அவருக்கு நெருக்கமான சிலர் விக்னேஸ்வரனை மீண்டும் முதல மைச்சர் வேட்பாளராக நியமிப்பதற்கு விரும்புவதாகத் தெரிகின்றது. ஆனால் கூட்டமைப்பின் சார்பில் அவர் நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது.
கூட்டமைப்பின் தலைமை, விக்னேஸ்வரனை முதலமைச்சர் பதவியில் அமர்த்திய போதிலும் அவர் அதற்கான விசுவாசத் தைக் காட்டுவதாகத் தெரியவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அவர் தமது உண்மையான சுயரூபத்தைக் காட்டிவிட்டார்.
தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடாமல் அவர் ஒதுங்கி நின்றமை இதைத் தௌிவாக எடுத்துக் காட்டிவிட்டது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட போது கூட்டமைப்பின் விருப்பத்துக்கு மாறாக அதில் இணைந்து கொண்டதுடன் இணைத்தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.
தமக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டபோது, வடக்கு முதலமைச்சர் கூட்டமைப்புக்கு எதிரானவர்களின் ஆதரவைத் திரட்டுவதில் ஈடுபட்டார். மாற்றுத் தலைமை தொடர்பான சிந்தனை எழுவதற்கும் இவரே காரணமாக இருந்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலின் போதும் கூட்டமைப்பி லிருந்து விலகி நின்றுள்ளார். கூட்டமைப்பு இக்கட்டானதொரு சூழ்நிலையில் இருந்ததை இவர் அறிந்து கொண்டபோதிலும் அதற்கு ஆதரவான பரப்புரைகளில் இவர் ஈடுபடவில்லை.
எப்போதுமே கூட்டமைப்பை விமர்சிக்கும் வழக்கம் கொண்ட
வடக்கு முதலமைச்சர்
ஆனால் தேர்தல் முடிவுகள் வௌிவந்தபோது கூட்டமைப் பின் பிரதான பங்காளியான தமிழரசுக் கட்சியை எள்ளி நகையாடும் விதத்தில் கருத்துக்களை வௌியிட்டார். தேர்தல் முடிவுகள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு நிலநடுக்கமாகவே அமைந்துவிட்டதென அவர் கூறியதை என்றுமே மறுக்க முடியாது.
தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றிருக்குமானால், கூட்டமைப்பு தர்மசங்கடமானதொரு நிலையை எதிர்கொண்டிருக்கும். ஆனால் தலைமை அமைச்சர் பெற்ற வெற்றி அதைக் காப்பாற்றிவிட்டது என்ற போதி।லும், எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும் சவாலாகவே மாறிவிட்டது.
இதன் வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதும் தெரிந்துவிடும்.
இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை வேட்பாளராக நியமிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. இந்த முறை கடந்த முறை போலன்றி தேர்தலில் கடுமையான போட்டி நிலவுமென்பதை எதிர்பார்க்க முடியும்.
இந்த நிலையில் மக்களது ஏகோபித்த ஆதரவை ஈட்டக்கூடிய ஒருவரை வேட்பாளராக நியமிக்கவேண்டிய அவசியதேவை ஏற்பட்டுள்ளது.
ஆளுமைத் திறன் மிக்கவர்கள் மாகாண சபை வேட்பாளர்களாக
களம் இறக்கப்படல் வேண்டும் கூட்டமைப்பு எதைச் செய்தாலும் அதில் குறை காண்கின்ற மனநிலையில் சிலர் உள்ளனர்.
அவர்கள் கூட்டமைப்புக்கு எதிரான வதந்திகளைப் பரப்பி விடுவதிலும் ஈடுபட்டு வருகின்றனர். மக்களில் ஒருபகுதியினர் இவர்கள் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்வதையும் அவதானிக்க முடிகின்றது.
மக்களின் இந்த தவறான நடவடிக்கைகள் களைந்தெறியப்படல் வேண்டும். இதற்கு ஆளுமை மிக்கவர்கள் மாகாணசபைக்கான தேர்தல் காலத்தில் களம் இறக்கப்படல் வேண்டும். இதில் பிரதானமானது முதலமைச்சருக்கான வேட்பாளர் தெரிவு என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
முதலமைச்சருக் கான வேட்பாளர் தெரிவில் கடந்த முறை ஏற்பட்ட தவறுகளைச் சீர்செய்வதற்கு கூட்டமைப்பு திணறி வருவதைப் போன்றதொரு நிலை இனியும் உருவாகிவிடக் கூடாது. ஆகவே கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தீர்க்கமாக ஒன்று கூடி ஆராய்ந்து மக்களால் ஏற்கப்படத்தக்க, தகுதி வாய்ந்த ஒருவரை முதலமைச் சர் வேட்பாளராக நியமிக்க வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலில் சென்ற தடவை போன்று அமோக வெற்றியைப் பெறுவதற்கு இது மிகவும் உபயோ கமானதாக விளங்கும். என்னதான் இருந்தாலும் விக்னேஸ்வ ரனை முன்நிறுத்தி ஆதாயம் பெறுவதற்கு எதிர்த்தரப்பினர் முயற்சிக்கவே செய்வார்கள். இதற்குத் தகுந்த பதிலடியை வழங்குவதும் கூட்டமைப்பின் தலையாய கடமையாகும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!