ரணிலின் கூட்டங்களில் ஒருபோதும் பங்கேற்கமாட்டேன்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமருடன் கலந்துரையாடியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் ஒருபோதும் கலந்துகொள்ள போவதில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் சபையில் தெரிவித்தார்.
   
பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கமான அலங்கோலமான, கேவலமான, முட்டாள்தனமான, அயோக்கியத்தனமான அரசாங்கமேயாகும். தான் பிரதமர் பதவியை பெறவில்லை, தன்னை அழைத்தே ஜனாதிபதி பதவி வழங்கினார் என ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார் .

ஆனால் விமல் வீரவன்சவோ ரணில் பெயரை சில தரப்பினர் பெயரிட்டதாக கூறியுள்ளார்.
இதேவேளை ஒரே விடயத்திற்கு ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறாக அழைப்பு விடுத்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்றனர். இவர்கள் முட்டாள் தனமான அரசாங்கத்தையே நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் மக்கள் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு இன்றி கஷ்டப்படுகின்றனர். மலைநாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கூட்டுங்கள்.

இல்லையென்றால் அங்கு பயிரிடப்படாத காணிகளை வழங்குங்கள். இது தொடர்பில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரின் கூட்டத்திற்கும் சென்றுள்ளோம். இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இனிமேல் ஒருபோதும் பிரதமரின் கூட்டத்திற்கு செல்ல மாட்டோம். அது வெறும் ஏமாற்று வேலையே என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!