இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? – கொந்தளித்த சீமான்!

“10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடம் என்று மட்டும் பதிவு செய்திருப்பதும் கண்டனத்திற்குரியது” என்று, சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பதிவில், “10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும் போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடம் என்று மட்டும் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
    
‘எங்கும் தமிழ்.. எதிலும் தமிழ்..!’ எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதான். தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பது தான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி. வெட்கக்கேடு..!” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!