யாழ்ப்பாணம் செல்கிறார் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்வார இறுதிக்குள் இவர் யாழ் செல்வார் என அறிவிக்கப்பட்ட போதும், இவருக்கு எதிரான வழக்கு காரணமாக இந்த விஜயத்தை அடுத்த வாரத்துக்கு தள்ளி போட்டு உள்ளார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போருக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகளை நேரில் சென்று ஆராய்வதற்காகவே இவர் யாழ். செல்ல உள்ளார். குறிப்பாக யாழில் வசிக்கக் கூடிய தமிழ் பௌத்தர்களை சந்தித்து பேசுவதே இவரின் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

“வெறுமனே விமர்சித்து கொண்டு இருப்பதால் எவ்வித பயனும் கிடையாது, யாழ்ப்பாண மக்களின் அவலங்களை நேரில் சென்று பாருங்கள்” என்று சிரேஷ்ட சட்டத்தரணி மைத்திரி குணரட்ண ஞானசார தேரரிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்தே ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வருவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!