சீனாவால் இந்தியாவில் தங்கத்துக்கு தட்டுப்பாடு!

உலக சந்தைகளுக்கு தங்கம் வழங்கும் வங்கிகள், சீனா, துருக்கி மற்றும் பிற சந்தைகளில் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதைக் குறைத்து உள்ளன. தேவை அதிகம்தங்கம் வாங்குவதற்காக இந்தியாவை விட அதிக பிரீமியம் செலுத்த சீனா, துருக்கி ஆகிய நாடுகள் தயாராக உள்ளன. இதையடுத்து, தங்கம் வழங்கும் வங்கிகள், தங்கள் கவனத்தை அந்நாடுகளின் பக்கம் திருப்பி உள்ளன.இதனால், இந்தியாவில் தங்கத்துக்கான தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் பண்டிகை காலத்தில் தேவை அதிகமாக இருக்கும்.எனவே, வேறு வழியின்றி, இந்திய வாடிக்கையாளர்கள் அதிக பிரீமியத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்கின்றனர்.உலகளவில், ‘ஐ.சி.பி.சி., ஸ்டாண்டர்டு பேங்க், ஜே.பி., மார்கன், ஸ்டாண்டர்டு அண்டு சார்ட்டர்டு பேங்க்’ ஆகியவை, இந்தியாவுக்கு அதிகளவில் தங்கத்தை சப்ளை செய்வதாக உள்ளன. இவை தங்கத்தை இறக்குமதி செய்து, தங்களுடைய பெட்டகத்தில் இருப்பு வைத்து கொள்ளும்.

ஆனால், தற்போது அவற்றின் பெட்டகத்தில், கடந்த ஆண்டு இருப்பில் 10 சதவீதம் அளவுக்கே உள்ளது.உயர்வுவழக்கமாக, பண்டிகை காலத்தில், டன் கணக்கில் இருப்பு இருக்கும் நிலையில், தற்போது கிலோ கணக்கில் மட்டுமே உள்ளது என்கின்றனர், விபரம் அறிந்தவர்கள்.இந்தியாவின் தங்க இறக்குமதி, ஓராண்டுக்கு முன்பு இருந்ததை விட, கடந்த செப்டம்பரில் 30 சதவீதம் குறைந்து, 68 டன்னாக இருந்தது.

அதேநேரம், துருக்கி தங்கம் இறக்குமதி 543 சதவீதம் உயர்ந்துள்ளது.ஹாங்காங் வழியாக மேற்கொள்ளப்படும் சீனாவின் நிகர தங்க இறக்குமதி, ஆகஸ்ட் மாதத்தில், கிட்டத்தட்ட 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!