கொழும்பு வந்தார் எரிக் சொல்ஹைம்!

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹைம் நேற்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தியாவின் சென்னையில் இருந்து அவர் கொழும்பு வந்துள்ளார்.

இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான ஏ.ஐ. 271 விமானத்தில்நேற்றுப் பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். எரிக் சொல்ஹைம், கடந்த யுத்த காலத்தின் போது நோர்வேயின் அமைதிக்கான பிரதிநிதியாக இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டிருந்தார் .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!