மக்களின் குரல்களை செவிமடுக்க வேண்டும்: அரசுக்கு மைத்திரி உபதேசம்

அரசு மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போதைய தேவையாக உள்ளது.

பசி, உணவின்மை, விவசாயப் பிரச்சினை, மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் நாட்டில் காணப்படுகின்றன. வைத்தியர்கள் பலர் தற்போது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். சுகாதாரத்துறை பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. பணம் இன்மையால், மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில், நாடு என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் எம்மிடையே பேதங்கள் காணப்படுவது பொருத்தமற்றது. இதேவேளை மக்களின் பக்கம் நின்று அவர்களின் குரல்களுக்குச் செவிமடுத்துச் செயற்படுவது மிகவும் அவசியமாகும்.நாட்டைக் கட்டி எழுப்புவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் மக்களின் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கும் எம்மால் ஒத்துழைப்பு வழங்கப்படும்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!