மது அருந்துபவர்களுக்கு அற்புத அறிவிப்பை வெளியிட்ட கோவா அரசு!

கோவாவில் மது அருந்தும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்காக அம்மாநில அரசு சூப்பரான உத்தரவை பிறப்பித்துள்ளது கோவாவில் குடிமகன்கள் யாரும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,குடிமகன்கள் போதையில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டக்கூடாது.

அவர்களை டாஸ்மாக் அல்லது பார் உரிமையாளர்கள் தான் டாக்ஸி அல்லது கேப் மூலம் பத்திரமாக வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தங்கள் வாகனங்களை குடிப்பவர்கள் மறுநாள் எடுத்துச் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது. விபத்துக்களை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!