குற்றச் செயல்களுக்கு துணை சென்ற பொலிஸ் அதிகாரி: நீதிமன்றம் வழங்கியுள்ள கடுமையான தண்டணை October 19, 2022 9:36 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சூதாட்ட வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டேன் என உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உறுதியளித்து 5000 ரூபா லஞ்சம் பெற்றுள்ளார்.குறித்த உப பொலிஸ் பரிசோதகருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 வருட சிறை தண்டனை விதித்துள்ளது.இதேவேளை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசியை திருப்பி தர லஞ்சம் கேட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு குற்றங்களுக்காகவும் அவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.ஏழு வருடங்களுக்கு முன்னர் அதிகாரி அஹங்கல்ல பிரதேசத்தில் கடமையாற்றிய போதே இந்த லஞ்சம் கோரல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…