உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார் முன்னாள் போராளி!


தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள், அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியான வேலுப்பிள்ளை மாதவமேஜர் நேற்றுமுன்தினம் ஆரம்பித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் நேற்று தொடர்ந்தது.
    
இந்நிலையில் தமது மகனின் கோரிக்கை நியாயமானது எனவும் இருப்பினும் பல இழப்புக்களை சந்தித்த எம்மால் இனியும் இழப்புக்களை சந்திக்க முடியாது எனவும் எனவே தலைமைகள் இவரது கோரிக்கைக்கு விரைந்து தீர்வு வழங்கி எமக்கு ஆதரவளிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவரின் தாய் மற்றும் சகோதரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்துக்கு பொதுமக்கள் பலர் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவரின் உடல் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!