மரண தண்டனையை எதிர்நோக்கி வாழும் கைதிகள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரிப்பு! January 31, 2023 9:39 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்தியாவில் 2022-ம் ஆண்டு மரண தண்டனை குறித்த புள்ளிவிவர அறிக்கையை டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள விசாரணை கோர்ட்டுகள் 165 மரண தண்டனைகளை விதித்துள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை எண்ணிக்கை இதுவே ஆகும்.மரண தண்டனை வழக்குகளில் 51.28 சதவீத வழக்குகள் பாலியல் குற்ற வழக்குகள் ஆகும். ஆமதாபாத் குண்டு வெடிப்பு என்ற ஒரு வழக்கில் மட்டும் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதிநாள் நிலவரப்படி, 539 கைதிகள், மரண தண்டனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். மரண தண்டனையை எதிர்நோக்கி வாழும் கைதிகள் எண்ணிக்கை, 2015-ம் ஆண்டுக்கு பிறகு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts உலகப் பிரச்சனையாக உருவெடுக்கும் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… நிலவில் பிளாஸ்மா இருப்பதை கண்டறிந்தது விக்ரம் லேண்டர்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…