வெளிநாடு சென்ற கோட்டாபய தொடர்பில் வெளியான தகவல் February 18, 2023 9:26 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்பொழுது மியன்மாரில் பத்து நாட்கள் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மலேசியாவின் கோலாலம்பூர் நகரிற்கு பயணம் செய்திருந்தார்.அங்கிருந்து அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எவ்வாறெனினும், கோட்டாபய ராஜபக்ச மியன்மாருக்கு சென்று அங்கு மத வழிபாடுகளில் ஈடுபட உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது பாரியார் அயோமா ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சரக்கு போக்குவரத்து செய்யும் பகுதியின் ஊடாக மலேசியாவிற்கு புறப்பட்டுச் சென்றிருந்தார் என ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.முக்கிய பிரபுக்கள் பயணம் செய்யும் பகுதியை பயன்படுத்தாது கோட்டாபய, சரக்கு போக்குவரத்து செய்யும் பகுதியின் ஊடாக பயணம் செய்தார் தெரிவிக்கப்படுகின்றது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…