இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

இந்தியாவில் கடந்த வாரம் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் ராஜ்காட் அருகே சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத்துக்கு சற்று வடக்கே பாகிஸ்தானுக்குள் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக NCS தெரிவித்துள்ளது.

3.21 மணிக்கு பதிவான இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இன்று காலை மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்படும் நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!