விரைவில் இந்தியா- இலங்கை இடையே தொடங்கவிருக்கும் கப்பல் சேவை!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஒட்டி, காங்கேசன்துறை துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணி தொடங்கியது. இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இந்தியாவின் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து வசதியை மேற்கொள்ள அந்நாட்டு அரசு, கப்பல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
    
அதன்படி, இந்த திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனிடையே, ஆயிரம் சதுர மீட்டர் பயணிகள் முனையம் அமைக்கும் பணியில், கடற்படை வீரர்கள் 60 ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வரும் 29ஆம் தேதி முதல் படகு சேவை தொடங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!