தொல்பொருள் ஆய்வுக்கு அமெரிக்க ஆராய்ச்சியாளர்களை வரவழைக்க வேண்டும்! April 17, 2023 8:34 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தமிழர்களின் நிலங்களை பெரும்பான்மையினர் ஆக்கிரமிப்பு செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் இரண்டாயிரத்து 246 நாட்களை கடந்தும் தொடர்கின்றது. அதன் செயலாளர் கோ.ராஜ்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்டதாக அல்லது ஆக்கிரமிக்கபட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வரலாற்று மற்றும் இனம் சாராத தொல்பொருள் ஆராய்ச்சியுடன் மட்டுமே நாம் செல்ல முடியும். அமெரிக்காவில் மட்டுமே மேம்பட்ட தடயவியல் ஆராய்ச்சி சாதனம் மற்றும் உபகரணங்கள் உள்ளன. இந்த தீவு யாருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக் அழைத்து வர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…