ஜனாதிபதி மாளிகை இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு!

ஜனாதிபதி மாளிகை, பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ளது. பிரதான கட்டிடம், புல்வெளி பகுதி, அசோகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் முதல் பகுதியாகவும், அருங்காட்சியக வளாகம் 2-வது பகுதியாகவும் பிரிக்கப்பட்டு பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. 2 பகுதிகளையும் செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது.
    
இந்நிலையில், ஜனாதிபதி மாளிகை அருங்காட்சியக வளாகத்தை திங்கட்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் பார்வையிடலாம் என்று ஜனாதிபதி மாளிகை அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இந்த நடைமுறை (ஜூன் 1-ந் தேதி) இன்று முதல் அமலுக்கு வந்தது.

பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை 7 தனித்தனி நேரங்களில் பார்வையிட ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மாளிகை, 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து, ஜம்மு & காஷ்மீர் மற்றும் தாஜ்மஹாலைச் சுற்றிலும் முகலாயர்களால் கட்டப்பட்ட தோட்டங்களின் பாணியில் அமைக்கப்பட்டள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!