குருந்தூர்மலை காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கவில்லை!

குருந்தூர் மலை விகாரை நிலங்களை மக்களிற்கு பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர், தொல்பொருளியல் நிபுணர் எல்லாவல மேதானந்த தேரருக்கு இதனை அறிவித்துள்ளார். குருந்தூர் மலை நிலம் என்பது அரசநிலம் என தெரிவித்துள்ள அவர் இதனை எவருக்கும் பகிர்ந்தளிக்க தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!