உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – சனி, ஞாயிறில் விசேட விவாதம்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரான்ஸ் 24க்கு செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில், ​அவா் இதனை தொிவித்துள்ளாா்.

எதிா்வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளாா். இதேவேளை, இவ்வாரம் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!