வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பு எம்.பிக்களை சேர்க்க உத்தரவு!

வடக்கு -கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், உள்­வாங்­கப்­ப­டாமை தொடர்­பில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது அதி­கா­ரி­களை கடிந்­து­ கொண்­டுள்­ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உட்­பட, வடக்கு – கிழக்­கைப் பிர­தி ­நித்­து­வப்­ப­டுத்­தும் அர­சி­யல் தரப்­புக்­களை செயலணியில் உள்­வாங்­கு­மாறு அவர் ஆலோ­சனை உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு- கிழக்கு மாகா­ணங்­க­ளுக்­கான சிறப்­புச் செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது. கூட்­டத்­தின் முடி­வில் ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது உயர்­மட்ட அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­ட­லில் ஈடு­பட்­டுள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு அனுப்­பப்­ப­டாமை தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

செய­லணி உறுப்­பி­னர்­க­ளாக அவர்­க­ளது பெயர்­கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று ஜனாதிபதியின் அதிகாரிகள் ­கு­ழா­மைச் சேர்ந்­த­வர்­கள் கூறி­யுள்­ளார்­கள். கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் பெயர்­க­ளை­யும் உள்­ள­டக்­கு­மா­று­தானே பணித்­தேன் என்று, அவ­ரது அதிகாரிகள் ­கு­ழா­­மைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளு­டன் ஜனாதிபதி கடும் தொனி­யில் கூறி­யுள்­ளார்.

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் அந்த மாகா­ணங்­க­ளைச் சேர்ந்­த­வர்­களை உள்­ள­டக்­க­வேண்­டும். சகல அர­சி­யல்­த­ரப்­புக்­க­ளை­யும் உள்­ள­டக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும் என்று அவர் பணித்­துள்­ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!