இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி

வட்டுக்கோட்டை-அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள் ளாக்கும் இனந்தெரியாத நப ர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்@ர் இளைஞர்கள் பத்து பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோக த்தர்களையும் இணைத்து குழுக்கள் அமைக்கப்படும்.

அந்தக் குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையை முன்னெடுக்கும். உடனடியாக அந்தக் குழுக்கள் அமைக்கப்ப டும் என்று யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

அராலி பகுதியில் கடந்த சில வாரங்க ளாக அந்தப் பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறி ப்பாக குள்ள மனிதர்கள் போன்று இருப்பதாகவும், பாயும் சப்பாத்துக்களை அணிந்தவா றும், முகம் மற்றும் உடல் முழுவதையும் கறுப்பு உடையினால் மறைத்தவாறு வரும் சிலரே இவ் அச்சுறுத்தல் செயற்பாட்டில் ஈடுப டுவதாக அப் பகுதி மக்கள் பலரும் தெரிவித்தனர்.

இவ்வாறு வருவோர் வீட்டின் கூரைகள் மீது கல்லெறிந்து தாக்குவதாகவும் வீட்டில் இருப்பவர்களது கண்களில் தென் படும் வகையில் பது ங்கி இருந்து விட்டு பின்னர் பாய்ந்து செல்வதாகவும் அப் பிரதேசவாசிகள் தெரி வித்திருந்தனர்.

இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடி க்கை எடுப்பது தொட ர்பாக அரச அதிகா ரிகள், மக்கள் பிரதி நிதிகள் பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அப்பிரதேச மக்கள் ஆகியோருக்கிடையில் ஆலோசனை கூட்ட மொன்று அராலி அம்மன் கோவிலடியில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம் பெற்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தனர்.
மேற்படி சம்பவத்தினால் தினமும் இரவுப் பொழுதை அச்சத்துடனேயே கழிப்பதாக வும், இளைஞர்கள் ஊர்களில் அதிகாலை மூன்று மணிவரை காவல் செய்வதாகவும், இதனால் அவர்களால் மறுநாள் ஒழுங்காக தொழிலுக்கு செல்லவோ அல்லது மாணவர் கள் கற்றல் செயற்பாடுகளுக்குச் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பி ட்டிருந்தனர்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வொ ன்றை வழங்குமாறும் அப் பகுதியில் பொலி ஸாரது ரோந்து நடவடிக்கைகளை அதிகப் படுத்துமாறும் மக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!