தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார். அவருடனான சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் அவை எல்லாவற்றையும் இப் போது பகிரங்கப்படுத்த முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறி சேன தலைமையில், தமிழ் – சிங்கள புத்தாண்டு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம் பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண் டார்.
இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோது, அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமை தொடர்பில் பேசினேன். மேலும், 2015ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்பதைக் கேட்டுக் கொண்டேன்.
இதற்கு முன்னரும் இது தொடர்பில் அரச தலைவருடன் பேச்சு நடத்தியிருந்தேன். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அதனைவிட வேறு பல விடயங்களும் பேச்சு நடத்தினேன். அது தொடர்பில் இப்போது பகிரங்கமாக கூறமுடியாது – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!