தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்- மைத்­தி­ரி!!

தேர்­த­லின்போது மக்­க­ளுக்கு வழங்கிய வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி பால சிறி­சேன தெரி­வித்­தார். அவ­ரு­ட­னான சந்­திப்­பில் பல விட­யங்­கள் பேசப்­பட்­டி­ருந்­தா­லும் அவை எல்­லா­வற்­றை­யும் இப் போது பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி ­சேன தலை­மை­யில், தமிழ் – சிங்­கள புத்­தாண்டு விழா நேற்று முன்­தி­னம் சனிக்­கி­ழமை இடம் பெற்­றது. எதிர்­க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கலந்து கொண் டார்.

இதன்­போது பேசப்­பட்ட விட­யங்­கள் தொடர்­பில் இரா.சம்­பந்­த­னி­டம் கேட்­ட­போது, அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் தீர்க்­கப்­ப­டாமை தொடர்­பில் பேசி­னேன். மேலும், 2015ஆம் ஆண்டு தேர்­த­லின் போது வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டும் என்­ப­தைக் கேட்­டுக் கொண்­டேன்.

இதற்கு முன்­ன­ரும் இது தொடர்­பில் அரச தலை­வ­ரு­டன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தேன். தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்­தார். அத­னை­விட வேறு பல விட­யங்­க­ளும் பேச்சு நடத்­தி­னேன். அது தொடர்­பில் இப்­போது பகி­ரங்­க­மாக கூற­மு­டி­யாது – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!