தமிழ் மீனவர்களின் வாடிகளைக் கொளுத்திய சிங்கள மீனவர்களுக்கு விளக்கமறியல்!

முல்லைத்தீவு, நாயாறில் தமிழ் மீனவர்களின் வாடிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்கள் மூவரும், எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த மூவரும், முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில், நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, பதில் நீதிவான் என்.சுதர்சன் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

நாயாறில் தமிழ் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள், 3 படகுகள், 2 இயந்திரங்கள் மற்றும் 27 வலைகள் உள்ளிட்ட பெறுமதியான சொத்துகள், திங்கட்கிழமை இரவு, எரியூட்டப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளுக்குப் பின்னர், 13க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே, தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும் சிலாபத்தைச் சேர்ந்தவர்களென, விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என்றும் முல்லைத்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!