யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளில் ஈடுபட்ட 10 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள் முனையில் வர்த்தகர்களிடம் கப்பம் பெறும் இரண்டு குழுக்களை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், வாள், கத்தி மற்றும் இரும்புகள் மற்றும் பல்வேறு இடங்களில் பறிக்கப்பட்ட கைப்பைகள் சிலவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 10 பேரில் 6 பேர் ஆவா குழு உறுப்பினர்கள் எனவும், ஏனைய 3 பேர் தனுரொக் குழு உறுப்பினர்கள் எனவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் மானிப்பாய் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 23 வயதுடையவர்களாகும். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!