கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர்

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும், இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுனர் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, விகாரைகள் கட்டப்படவுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவை எந்த இடத்தில் கட்டப்படவுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!