பிக்குகளையும், பௌத்தத்தையும் வேட்டையாடுகிறது அரசு! – மஹிந்த குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம், பிக்குகளையும், பௌத்த மதத்தையும், வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் வரலாறு காணாத சனக் கூட்டம் ஒன்றை கண்டுகொள்ளலாம். இந்த ஆர்ப்பாட்டம் எங்கு நடைபெறும் என்பது குறித்து நாம் இதுவரை அறிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள தினத்துக்கு முந்திய தினத்தன்றே ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளோம். நாம் முன்னதாகவே இடத்தை அறிவித்தால், அதற்கு அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தும். தடை உத்தரவுகளையும் நீதிமன்றத்திடம் பெற்றுக் கொள்ளும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!