கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல்

கேரளாவில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பரவி வரும் எலிக்காய்ச்சலுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. வீதிகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கி உள்ள நிலையில், சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிப்பு பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன.

குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.

குறித்த காய்ச்சலுக்கு இன்று வரை 12 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சலுக்கு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரச வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!