பதவி யாருக்­கும் செல்­லக்­கூ­டாது என்றே நடு­நி­லமை தவிர்த்­தோம் -ஆனந்­தன் எம்.பி.

தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி நடு­நி­லமை வகித்து, நகர சபை­யின் தவி­சா­ளர் பதவி வேறு யாருக்­கும் செல்­லக் கூடாது என்­ப­தால் அங்கு போட்­டி­யிட்­டோம் என்று கூறி­னார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன்.

வவு­னியா நகர சபை­யில் நேற்று தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யி­னர் திடீ­ரெ­னத் தவி­சா­ளர் பத­விப் போட்­டி­யில் கள­மி­றங்­கி­னர். ஏனைய கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் வெற்றி பெற்­ற­னர். இது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் செய­ல­ரு­மான சிவ­சக்தி ஆனந்­தன் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் கூறி­ய­தா­வது,-
தவி­சா­ளர் தொடர்­பாக நாங்­கள் நடு­நி­லமை வகிப்­போம் என்று எமது கட்சி ஆரம்­பத்­தில் முடி­வெ­டுத்­தி­ருந்­தது. ஆனால் இங்கு கட்­சி­கள் பெற்ற உறுப்­பி­னர்­களை கணக்­கிட்­டுப் பார்த்­த­போது நாங்­கள் நடு­நி­லமை வகித்­தால் தவி­சா­ளர் பதவி வேறு யாருக்­கும் செல்­லும் நிலமை இருந்­தது.

நாம் நடு­நி­லமை வகித்­த­தால் தான் பதவி வேறு யாருக்­கும் சென்­றது என்ற குற்­றச்­சாட்­டுக்கு எமது கட்சி ஆளா­கா­மல் இருப்­ப­தற்­கா­கவே மிக­வும் அவ­தா­ன­மாக பல தரப்­பட்­ட­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டியே இந்த முடிவை எடுத்­தோம் – என்­றார்.

இதே­வேளை, வெங்­க­லச்­செட்­டிக்­கு­ளம் பிர­தேச சபை­யில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி நடு­நி­லமை வகித்­தி­ருந்­தது. அந்­தச் சபையை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி கைப்­பற்­றி­யி­ருந்­தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!