வரதட்சனை கேட்டு மனைவியை சுவரில் கட்டி வைத்து தாக்கிய கணவன்!!

தனது மனைவியிடம் பிறந்த வீட்டுக்குள் சென்று வரத சட்சனைவாங்கி வருமாறு கூறி கொடுமைப்படுத்திய கணவன், மனைவியின் கையை துப்பட்டாவின் ஒரு முனையால் கட்டி, மறுமுனையை வீட்டின் மேல் சுவரில் கட்டி தொங்க விட்டுள்ளார். பின்னர் தனது பெல்ட்டால் மனைவியைத் தொடர்ந்து 4 மணி நேரம் தாக்கியுள்ளார்.

மனைவி வலி தாங்காமல் கதறி அழுதுள்ளார். மனைவி சுயநினைவு இழக்கும் வரை அடித்து உள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து, மனைவியின் சகோதருக்கு அனுப்பி உள்ளார்.

அத்துடன் வரதட்சனை பணத்தை கொடுக்கவில்லை என்றால், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடரும் என்று பகிரங்கமாக மிரட்டி உள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்,

”நான் சுயநினைவு இழக்கும் வரை என்னை கணவர் பெல்ட்டால் அடித்து துன்புறுத்தினார். பின்னர் நான் மயங்கி விழுந்து விட்டேன். மயக்கம் தெளிந்து பார்த்த போது எனது கைகள் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்தேன்” என்று கண்ணீர் மல்க கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!