குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் வீழ்ச்சி – ரணில்

சிறிலங்காவில் குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த சிறிலங்கா காவல்துறையின் 152 ஆவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

”2014ஆம் ஆண்டு, 50,962 குற்றச்செயல்கள் பதிவாகியிருந்தன. எனினும், 2017ஆம் ஆண்டில், 35,971 குற்றச்செயல்களே இடம்பெற்றுள்ளன.

2017ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றச் செயல்களில் 79 வீதமானவை, தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

விரைவில் காவல்துறை மற்றும் குற்றவியல் நீதி கற்கைகள் பல்கலைகக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!